விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் வீட்டிலேயே அமிர் தனது காதலை பாவனியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்து வந்தார் பாவனி. நடிகை பாவனி ‘சின்னத்தம்பி’ உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் திருமணமான சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தார். அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவரது இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாவனி.
இந்த பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர் பாவணியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்து வந்த பாவனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒன்றாகவே காணப்பட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர். இதில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடி தங்களது கடின உழைப்பால் டைட்டிலையும் வென்றனர் .தற்பொழுது இவர்கள் வெள்ளி திரையில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தான் அமீரின் காதலை பாவனி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். மேலும் ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் அமீர். இவர் தற்பொழுது பாவனியுடன் தான் வாங்கிய புது கார் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ஒருசில ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறியும், ஒருசிலர் ‘எப்பதான் கல்யாணம் பண்ணிக்க போறீங்க?’ என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…
மும்பையின் மலாத் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 34 வயது பெண்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…
சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…
தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…
சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…