#image_title
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.
ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிடுவிட்டார். தற்போது வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.
#image_title
இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் வீட்டில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 6 ஆவதாக கடந்த வாரம் சிவகுமார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதாவது போட்டியாளர்கள் devil மற்றும் Angel விளையாட்டு விளையாடுகிறார்கள். இதில் தேவதையாக இருப்பவர்களின் எமோஷனை தூண்டி அவர்களிடமிருந்து ஒரு ஸ்டாரை எடுத்துக்கொள்ளலாம்.
இது தான் போட்டியின் விதி. ஏஞ்சல்களை கோபப்படுத்தி அவர்களிடம் இருக்கும் நட்சத்திரங்களை பேய்கள் வாங்கி சேகரித்தால் அந்த நபருக்கு நாமினேஷன் ப்ரி பாஸ் கொடுக்கப்படும் என பிக்பாஸ் கூறியிருந்தார் பிக்பாஸ். அப்போது திடீரென்று ஜாக்குலினுக்கும் தர்ஷிகாவிற்கும் சண்டை வெடித்துள்ளது. அப்போது தர்ஷிகா இது ஒன்னும் உங்க அப்பன் வீடு இல்ல என்று கோபமாக கத்துகிறார். இதனால் கோபமடைந்த சௌந்தர்யா எதுக்கு டி அவங்க அப்பாவை இழுக்குற என்று சண்டை வெடித்துள்ளது. ஜாக்குலினிற்கு அப்பா கிடையாது என்பதால் சௌந்தர்யா கோபப்பட்டுள்ளார். ஆனால் தர்ஷிகாவிற்கும் அப்பா கிடையாதாம். இந்த புரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…