விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கி வருவதால் எந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனைப் போலவே சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனா, விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட ஒரு சில போட்டியாளர்கள் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர்.
இதனை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கொண்டாடினர். இப்படி மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோது எலிமினேஷன் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து போட்டியாளர் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இன்னும் பினாலே நடக்க மூன்று வாரங்களுக்குள் தான் இருப்பதால் தற்போது இறுதிக்கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…