வேலூரே நடுங்கிப்போச்சு..! பிரீசர் பாக்ஸில் 6 வயது சிறுவனை கொன்று… அத்தை சொன்ன அந்த காரணம்.. ஆனால் ஊரே சொல்லும் பகீர் பின்னணி..!!

Spread the love

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில், 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேல்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் – ஆஷா தம்பதியினரின் 6 வயது மகன் முகிலன், கடந்த 40 நாட்களாக அவனது அத்தை ரேவதி மற்றும் பாட்டி விஜயா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துள்ளான். இந்நிலையில், ஜூன் 14 அன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அவனது அத்தை ரேவதி தோசை கரண்டியால் சரமாரியாக அடித்துக் கொடுமைப்படுத்தியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சிறுவன் முகிலன் உயிரிழந்ததும், அத்தை ரேவதியும் பாட்டியும் சேர்ந்து சிறுவனின் சடலத்தை மறைத்து, இறந்தவர்களை வைக்கும் பிரீசர் பாக்ஸில் வைத்துள்ளனர். திடீரென பிரீசர் பாக்ஸ் கொண்டு வரப்பட்டதைக் கண்டும், குழந்தையின் இறப்பில் சந்தேகம் அடைந்தும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மேல்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

இந்தக் கொடூரக் கொலைக்குக்குப் பின்னால் மாந்திரீகப் பின்னணி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பலத்த சந்தேகம் எழுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ரேவதி மற்றும் அவரது தாயார் விஜயா ஆகிய இருவரும் தொடர்ந்து மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அமாவாசை தினத்தில் சிறுவனைப் பலி கொடுத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், தம்பிக்கும் அவனது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததற்குக் குழந்தையே காரணம் என்ற ஆத்திரத்தில் அடித்ததாக ரேவதி போலீசாரிடம் கூறியுள்ளார். தற்போதைக்கு ரேவதியைக் கைது செய்துள்ள போலீசார், மாந்திரீகக் கோணத்திலும் பாட்டி விஜயாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

1 மணத்தியாலம் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago