சென்னை சாமியர்ஸ் சாலையில் உள்ள கிரவுண் பிளாசா சென்னை அடையார் பார்க் 5 ஸ்டார் ஹோட்டல் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி உடன் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடையாளமாக இருந்த 287 அறைகள் கொண்ட ஹோட்டல் இனி சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபர் டிடிவாசுவால் அடையாறு கேட் ஹோட்டல் என முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஆடை ஏற்றுமதியாளர் கோயல் ஹோட்டலை வாங்கினார்.
இப்படி அடுத்தடுத்து பலரும் வாங்க இறுதியாக பாஷியம் கன்ஸ்ட்ரக்சன் குழு ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இதில் ஒரு கிரவுண்ட் விலை 10 கோடி முதல் 12 கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சதுர அடி முப்பதாயிரம் ரூபாய் என கூறப்படுகின்றது. இங்கு சுமார் 130 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஐந்தாயிரம் முதல் 7000 சதுர அடி அளவில் இரட்டைக் கோபுர கட்டடங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
குடியிருப்பு 15 கோடி முதல் 21 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கு பிளாட் வாங்க அட்லி, நெல்சன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் புக்கிங் செய்துள்ளதாகவும் இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா என பிரபலங்கள் பலரும் இங்கு பிளாட் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.