மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஒரு பெண்ணின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு அவரது அஸ்தி திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது சாபாபாய் பாட்டீலின் என்ற பெண் மரணத்தைத் தொடர்ந்து, அவரது விருப்பப்படி நகைகளோடு அவரை மெஹ்ருன் தகன மைதானத்தில் தகனம் செய்துள்ளார்கள் அவரின் குடும்பத்தினர். இதனையடுத்து மறுநாள், அவரது குடும்பத்தினர் சாம்பலை சேகரிக்க வந்தபோது, சாபாபாயின் தலை, கால்கள் மற்றும் கைகளின் எலும்புகள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த சாபாபாய் பாட்டீலின் உடலில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக எலும்புகளும் திருடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறந்த பெண்ணின் மகன் ஆர்.கே. பாட்டீல் கூறுகையில், “எங்கள் அம்மா இறந்துவிட்டார், அவருக்கு நேற்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சமூக பாரம்பரியத்தின்படி சாம்பலை சேகரிக்க நாங்கள் வந்தோம், ஆனால் அவை பாதுகாப்பாக இல்லை. அவரது தலை, கைகள் மற்றும் கால்கள் திருடப்பட்டன. நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம்” என்றார். சாம்பலைத் திரும்பப் பெற காவல்துறையில் புகார் அளிப்போம். இதுபோன்ற சாம்பல் திருடப்படுவதைத் தடுக்க இந்த இடத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவரைக் கட்டவும், ஒரு பாதுகாவலரை நியமிக்கவும், 24 மணி நேரத்திற்குள் செயல்படும் சிசிடிவி கேமராக்களை நிறுவவும் நகராட்சியை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…