மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஒரு பெண்ணின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு அவரது அஸ்தி திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது சாபாபாய் பாட்டீலின் என்ற பெண் மரணத்தைத் தொடர்ந்து, அவரது விருப்பப்படி நகைகளோடு அவரை மெஹ்ருன் தகன மைதானத்தில் தகனம் செய்துள்ளார்கள் அவரின் குடும்பத்தினர். இதனையடுத்து மறுநாள், அவரது குடும்பத்தினர் சாம்பலை சேகரிக்க வந்தபோது, சாபாபாயின் தலை, கால்கள் மற்றும் கைகளின் எலும்புகள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த சாபாபாய் பாட்டீலின் உடலில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக எலும்புகளும் திருடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறந்த பெண்ணின் மகன் ஆர்.கே. பாட்டீல் கூறுகையில், “எங்கள் அம்மா இறந்துவிட்டார், அவருக்கு நேற்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. சமூக பாரம்பரியத்தின்படி சாம்பலை சேகரிக்க நாங்கள் வந்தோம், ஆனால் அவை பாதுகாப்பாக இல்லை. அவரது தலை, கைகள் மற்றும் கால்கள் திருடப்பட்டன. நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம்” என்றார். சாம்பலைத் திரும்பப் பெற காவல்துறையில் புகார் அளிப்போம். இதுபோன்ற சாம்பல் திருடப்படுவதைத் தடுக்க இந்த இடத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவரைக் கட்டவும், ஒரு பாதுகாவலரை நியமிக்கவும், 24 மணி நேரத்திற்குள் செயல்படும் சிசிடிவி கேமராக்களை நிறுவவும் நகராட்சியை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
