தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தங்களது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுவை ‘தீய சக்தி’ எனக் குறிப்பிட்டு, அந்த ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மையான இலக்கு எனத் தெளிவுபடுத்தினார். கொள்கை மற்றும் லட்சியங்களில் சமரசம் இன்றி செயல்படுவதோடு, அதிகாரப் பகிர்வு குறித்த தெளிவான நிலைப்பாட்டை விஜய் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், தற்போதைய சூழலில் கூட்டணி தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் அருண்ராஜ் உறுதிப்படுத்தினார். தேர்தலுக்கு இன்னும் காலமிருப்பதால், இப்போதைக்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. விஜய்யின் இந்த அதிகாரப் பகிர்வு அறிவிப்பு, வரும் தேர்தல்களில் தமிழகத்தின் பாரம்பரியக் கூட்டணி அரசியலில் ஒரு புதிய மாற்றத்தையும், சிறு கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…