ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனும் நடிகர் நாகேஷூம் வெளியூரிலிருந்து காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தொழுப்பேடு என்கிற ஊரில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்து போக நேரமாகும் என்று அங்கிருந்த சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதுவரை என்ன செய்வது என்று நாகேஷ் ஜெயகாந்தனிடம் கேட்டிருக்கிறார். பிச்சை எடுக்கலாம் என்று ஜெயகாந்தன் கூறியிருக்கிறார்.
அப்படியா? அதுவும் சரிதான். ஆனால் இப்படியே போய் பிச்சை எடுத்தால் யார் நம்புவார்கள் என்று கேட்ட நாகேஷ் காரில் இருந்த லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ரோட்டோரத்தில் போய் உட்கார்ந்து விட்டார். இதை பார்த்து மிரண்ட ஜெயகாந்தன் அவரும் அதே கோலத்தில் நாகேஷ் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.
இரண்டு பேரும் போவோர் வருபவர்களிடம் எல்லாம் கைநீட்டி பிச்சை எடுத்தனர். அந்த பிச்சையில் ஜெயகாந்தனுக்கு தான் நிறைய வசூல் கிடைத்தது. இதில் நீதான் ஜெயிச்சே என்று ஜெயகாந்தனை நாகேஷ் கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டினார் என்று அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…