தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வி ஆண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தமிழக அரசின் 9,10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இந்த தேர்வு நடைபெறும். ஒவ்வொரு வினாத்தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் கணிதமும் இரண்டாவது தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும். மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 26 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…