இந்திய ராணுவத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் முகாம் குறித்த அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 8 மற்றும் 10-ஆம் வகுப்பு பயின்ற இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர் மற்றும் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 17 ½ முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுடன், ஏப்ரல் 1, 2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் நுழைவுத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும் என்பதால், இடைத்தரகர்களை நம்பாமல் ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்போதிலிருந்தே பயிற்சியைத் தொடங்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது நாட்டின் எல்லையைக் காக்கும் உன்னதப் பணி என்பதால், தகுதியுள்ள தமிழக இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…
கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…
ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…
விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…