தமிழகத்தில் பாக முகவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒருமையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில், “விஜய் இங்க யாருக்காவது உதவி செய்திருக்கிறாரா? நடனமாடுகிறார் என்பதற்காகவே அவரை வாட்ஸ்அப் மூலம் பிரபலப்படுத்தி முதலமைச்சராக்க முயன்றால் தமிழ்நாடு என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரிப் பிரச்சினையில் கர்நாடகா சென்று ஹெலிகாப்டரில் ஆய்வு செய்யப் போவதாக விஜய் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், முறையான புரிதல் இன்றி மற்ற மாநிலங்களில் தேவையில்லாமல் சென்று தலையிட்டால், அங்குப் பிரச்சினை ஏற்பட்டு நமது மாநிலத்தின் உரிமைகளும் பாதிக்கப்படும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திமுக அரசின் சாதனைகளான மகளிருக்கான மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம், மாணவர்களுக்கான ரூ.1,000 உதவித்தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை பாக முகவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். விஜய் வெறுமனே கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், இந்த உண்மைகளை கட்சியினராகிய நாம் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்படும் விஜய்யை, முன்னாள் அமைச்சர் ஒருவர் பொதுமேடையில் ஒருமையில் விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில், கவுண்டம்பாளையம் நிர்வாகி கனிமொழி…
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம்…
மதுரை பாண்டிகோவில் முதல் சிவகங்கை வரையிலான சாலையில், அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் என்பவர் கடுமையான மதுபோதையில் காரை ஓட்டிச்…
அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில்…
சொமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஆர்டரை வாங்குவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். ஆர்டர்…
பெங்களூரு மற்றும் மங்களூரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று…