சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடிபுதுநகரைச் சேர்ந்த இவர், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது மழையால் தண்ணீர் நிரம்பியிருந்த வடிகால் பள்ளத்தை கவனிக்க முடியாமல் உள்ளே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறப்பிற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அப்பள்ளத்தின் வழியே மின் வயர்கள் சென்றுள்ளதால் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ளது.
அரசின் அலட்சியப் போக்கே தனது தாயின் மரணத்திற்கு காரணம் என கலாவதியின் மகள் சங்கீதா வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார். வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் சரியாக அமைக்கப்பட்டிருந்தால் இந்த கொடூர விபத்தையும், உயிர் இழப்பையும் தடுத்திருக்க முடியும் என அப்பகுதி பொதுமக்கள் கடும் ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…