#image_title
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் 2016-ல் திரையுலகில் கால் பதித்தார். கன்னடத்தில் அஞ்சனை புத்ரா, சமக் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் சலோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். 2018ல் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீத கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் பிறகு இந்தியா முழுவதும் இளைஞர்களைக் கவர்ந்து ‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறினார்.
#image_title
தமிழில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது பாலிவுட்டில் கால்பதித்து கலக்கி வருகிறார். அமிதாபச்சன் உடன் குட் பை, ரன்பீர் கபூர் உடன் அனிமல் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த அனிமல் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து , வசூலையும் வாரி குவித்து வருகிறது.
டிசம்பர் 1ம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் இந்த ஆண்டு வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் நடித்த இத்திரைப்படம் வெளியான முதல் நாளே 116 கோடி வசூலை ஈட்டியது. ஒரே வாரத்தில் 500 கோடியை எட்டி சாதனை படைத்தது.
தற்பொழுது இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 600 கோடியை கடந்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் 1000கோடியை கடந்து சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனிமல் திரைப்படத்தின் மூலம் தற்பொழுது பாலிவுட்டின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை ரஷ்மிகா.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…