Categories: சினிமா

நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா, டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் – நடிகர் அஜீத்குமார் வருவாரா மாட்டாரா?

Spread the love

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் இளையதிலகம் பிரபு. அவரது மகள் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே திருமணமானவர். சிவாஜிகணேசன் குடும்பத்தை பொறுத்த வரை அவர்களது உறவினர்களுக்குள், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதுதான் வழக்கம். அதன்படி, தனது சொந்த அக்கா மகனை தான், மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணமான சில ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். முறைப்படி விவாகரத்தும் நடந்து விட்டது.

Adhik Ravichandran

இந்நிலையில் கேக் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும், மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இதையடுத்து இருவருமே தங்களது வீட்டில் பெற்றோர்களிடம் இதுபற்றி பேசிய நிலையில், அவர்களும் கலந்துபேசி தங்களது சம்மதத்தை தெரிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. இது இரண்டாவது திருமணம் என்பதால் அதிக ஆடம்பரமில்லாமல் எளிமையாக நடத்தப்பட உள்ளது. மணமகள் வீட்டார் 150, மணமகள் வீட்டார் 150 என மொத்தம் 300 பேருக்கு மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திருமண விழாவில் அஜீத்குமார் பங்கேற்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

Adhik Ravichandran

விடாமுயற்சி படப்பிடிப்புக்காக தனது மனைவி ஷாலினியுடன் துபாய் சென்றிருக்கிறார் நடிகர் அஜீத்குமார். துபாயில் உள்ள அவரது சொந்த வீட்டுக்குச் செல்லும் அஜீத்குமார், அங்கிருந்து பின் அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். இந்த சூழலில் வரும் 15ம் தேதி சென்னையில் நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா- ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்னும் நான்கு நாள் இடைவெளியில் நடக்க உள்ளது. இந்நிலையில் பிரபு குடும்பத்துக்கு அஜீத்குமார் மிகவும் வேண்டப்பட்டவர். தனது அடுத்த படத்தை இயக்க உள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் அவர் மிகவும் முக்கியமானவர். இந்த சூழலில் அவர் திருமணத்தில் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதுதான் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

11 seconds ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

10 minutes ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

28 minutes ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

37 minutes ago

பகீர்.! வானில் பற்றிய தீ… தரை இறங்கியபோது நேர்ந்த கோர விபத்து!” – 277 பயணிகளுடன் வந்த துர்க்கி ஏர்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதி..!

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…

46 minutes ago

BIG BREAKING: போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர்..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…

55 minutes ago