நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் இளையதிலகம் பிரபு. அவரது மகள் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே திருமணமானவர். சிவாஜிகணேசன் குடும்பத்தை பொறுத்த வரை அவர்களது உறவினர்களுக்குள், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதுதான் வழக்கம். அதன்படி, தனது சொந்த அக்கா மகனை தான், மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணமான சில ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். முறைப்படி விவாகரத்தும் நடந்து விட்டது.
இந்நிலையில் கேக் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும், மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இதையடுத்து இருவருமே தங்களது வீட்டில் பெற்றோர்களிடம் இதுபற்றி பேசிய நிலையில், அவர்களும் கலந்துபேசி தங்களது சம்மதத்தை தெரிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. இது இரண்டாவது திருமணம் என்பதால் அதிக ஆடம்பரமில்லாமல் எளிமையாக நடத்தப்பட உள்ளது. மணமகள் வீட்டார் 150, மணமகள் வீட்டார் 150 என மொத்தம் 300 பேருக்கு மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திருமண விழாவில் அஜீத்குமார் பங்கேற்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
விடாமுயற்சி படப்பிடிப்புக்காக தனது மனைவி ஷாலினியுடன் துபாய் சென்றிருக்கிறார் நடிகர் அஜீத்குமார். துபாயில் உள்ள அவரது சொந்த வீட்டுக்குச் செல்லும் அஜீத்குமார், அங்கிருந்து பின் அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். இந்த சூழலில் வரும் 15ம் தேதி சென்னையில் நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா- ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்னும் நான்கு நாள் இடைவெளியில் நடக்க உள்ளது. இந்நிலையில் பிரபு குடும்பத்துக்கு அஜீத்குமார் மிகவும் வேண்டப்பட்டவர். தனது அடுத்த படத்தை இயக்க உள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் அவர் மிகவும் முக்கியமானவர். இந்த சூழலில் அவர் திருமணத்தில் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதுதான் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.