Connect with us

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

CINEMA

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம். பின்னர் மன்மதன் திரைப்படத்தின் மூலமாக தனது காமெடி பயணத்தை தொடங்கிய இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களின் ஒருவராக வளம் வந்தார். முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார் நடிகர் சந்தானம்.

பின்னர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான நடிகர் சந்தானம் அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்த அசதி வருகிறார். காமெடியனாக மிகவும் பிரபலமாக இருந்த சந்தானம் அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கியதற்கு பிறகு அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

   

கடைசியாக அவர் நடிப்பின் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது இவர் ஜிஎன் அன்பு செழியன் தயாரிப்பில் ஆனந்த நாராயணன் இயக்கத்தில் இங்கு நான் தான் கிங் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.  இப்படத்தில் நடிகர் சந்தானம், பிரியாலையா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், மனோபாலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற மே பத்தாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்து வந்தனர். அப்போது பேசிய கூல் சுரேஷ் பத்திரிக்கையாளர் முன் அவர் பாணியில் சம்பந்தமே இல்லாமல் பேசி வந்தார். இதனால் நடிகர் சந்தானத்தின் முகம் சற்று மாறுபட்டது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top