சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்து காமாட்சியின் மகனுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதாகக் கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளனர். கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அவரது மகனுக்கு 48,500 ரூபாய் ஊக்கத்தொகை வந்துள்ளதாகக் கூறி செல்போனில் தொடர்பு கொண்ட நபர், அதனைப் பெற ஒரு கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். அதை உண்மை என நம்பி ஸ்கேன் செய்த முத்து காமாட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் திருடப்பட்டுள்ளது.
பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊக்கத்தொகை, பரிசுத் தொகை அல்லது அரசின் உதவித்தொகை தருவதாகக் கூறி வரும் இது போன்ற அறிமுகமில்லாத அழைப்புகளையும், கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்யும் முறைகளையும் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…