“உஷார் மக்களே…” இப்படி சொன்ன நம்மிராதிங்க… இது திருட்டு கும்பல்… மகனுக்கு ஊக்கத்தொகை… ஒரே ஒரு ஸ்கேன்… லட்சங்களை அபேஸ் செய்த மர்மம்… தவிக்கும் ஊறுகாய் வியாபாரி…!

By Visaka on ஆடி 25, 2026

Spread the love

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்து காமாட்சியின் மகனுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதாகக் கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளனர். கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அவரது மகனுக்கு 48,500 ரூபாய் ஊக்கத்தொகை வந்துள்ளதாகக் கூறி செல்போனில் தொடர்பு கொண்ட நபர், அதனைப் பெற ஒரு கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். அதை உண்மை என நம்பி ஸ்கேன் செய்த முத்து காமாட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் திருடப்பட்டுள்ளது.

பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊக்கத்தொகை, பரிசுத் தொகை அல்லது அரசின் உதவித்தொகை தருவதாகக் கூறி வரும் இது போன்ற அறிமுகமில்லாத அழைப்புகளையும், கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்யும் முறைகளையும் பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.