அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக 48 மணி நேரக் கெடு விதித்திருந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது திடீரென 5 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், தங்களது கடுமையான எச்சரிக்கைக்குப் பயந்தே அமெரிக்கா பின்வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ஒரு நொடியில் தரைமட்டமாக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். “ஈரான் நேரப்படி நாளை காலை அந்த மின் நிலையத்தை நாங்கள் தகர்த்திருப்போம். அதனை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு 10 பில்லியன் டாலர்கள் செலவாகும். அத்தகைய பேரழிவை அவர்கள் விரும்பாததால், அவர்களே முன்வந்து என்னைத் தொடர்பு கொண்டு ஒப்பந்தம் குறித்துப் பேசினார்கள்,” என்று அவர் அதிரடியாகக் கூறினார். தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும், ஈரானே வலிய வந்து தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோதல்களுக்கு இடையே, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது குறித்துப் பேசிய ட்ரம்ப், “விரைவில் ஒரு நிரந்தரமான மற்றும் அமைதியான ஒப்பந்தம் ஏற்படும். இனி போர் இருக்காது, ஈரானிடம் அணு ஆயுதங்களும் இருக்காது,” என்று நம்பிக்கை தெரிவித்தார். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்தப் பதற்றம், ஒரு பெரிய போராக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் இந்த சமரச அறிவிப்பு ஓரளவிற்கு நிம்மதியைத் தந்துள்ளது.
இருப்பினும், ஈரானின் தொடர்ச்சியான மறுப்புகளும், அமெரிக்காவின் இந்த அதிரடித் தகவல்களும் சர்வதேச அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக அமெரிக்காவும், மறுபுறம் அப்படி எதுவும் நடக்கவில்லை என ஈரானும் கூறிவருவது உலக நாடுகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று இரவு இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மறைமுக மோதலில் என்ன நடக்கும் என்பதையும், ட்ரம்ப் கூறிய அந்த “நல்ல ஒப்பந்தம்” சாத்தியமாகுமா என்பதையும் ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக…
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…