வயிற்றுக்குள் புகுந்த பாம்பு வெளியேற மறுக்குது.. நன்றிகெட்ட பாம்பு அது… நாஞ்சில் சம்பத்திடம் சிக்கிய முக்கிய புள்ளி… மகிழ்ச்சியில் சசிகலா..!!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒரு குட்டிக்கதை மூலம் கடுமையாகச் சாடிப் பேசினார். சசிகலா சிறைக்குச் செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார் என்றும், ஆனால் அவரோ தன்னை அந்த உயரிய இடத்தில் அமரவைத்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி துரோகம் செய்துவிட்டார் என்றும் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார். தற்போது சசிகலா அனுபவிக்கும் வேதனையை விவரித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் அரசியலை ஒரு பாம்பு மற்றும் வழிப்போக்கன் கதையோடு ஒப்பிட்டுப் பேசினார்.

நாஞ்சில் சம்பத் கூறிய அந்த குட்டிக்கதையில், வேட்டை நாய்க்குப் பயந்து ஓடும் ஒரு பாம்பு, ஒரு வழிப்போக்கனிடம் தஞ்சம் கேட்கிறது. அந்த வழிப்போக்கனும் கருணையுடன் அந்தப் பாம்பிற்குத் தன் உடலுக்குள் இடமளித்துக் காப்பாற்றுகிறான். வேட்டை நாய் சென்ற பிறகு, வழிப்போக்கனுக்கு வயிறு வலிக்கத் தொடங்குகிறது. இதனால் பாம்பை வெளியேறுமாறு அவன் கெஞ்சுகிறான். ஆனால் அந்தப் பாம்போ, “இந்த இடம் எனக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது, நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன்” என்று கூறி வெளியேற மறுக்கிறது. இந்த நன்றிகெட்ட பாம்பிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நாஞ்சில் சம்பத் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், தன்னை வளர்த்துவிட்டவர்களையே ஓரம் கட்டிவிட்டு, தற்போது அந்த இடத்திலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். சசிகலாவின் கதறல் இப்போதும் தன் காதுகளில் கேட்பதாகக் கூறிய நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் என்பது மற்றவர்களின் தயவில் தொடங்கி, பிறகு அவர்களுக்கே எதிராகத் திரும்பிய ஒன்று என்பதை இந்த உருவகக் கதையின் மூலம் பொதுமக்களிடையே விளக்கினார். தவெக மேடையில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை அவர் இவ்வாறு விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

கூட்டணிக்கு ஒத்துழைக்காத “அந்த கருப்பு ஆடுகள்” யார் யார்..? லிஸ்ட் எடுக்கும் விசிக தலைமை.. தேர்தல் முடிவுக்குப் பின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…

3 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

8 minutes ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

16 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

21 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

24 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

27 minutes ago