தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு தங்களுக்குத் தேவையான மின்னணு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற பொருட்களை இல்லத்தரசிகளே தேர்வு செய்து வாங்கிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தைப் போடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் திமுக தனது வாக்குறுதிகளாக முன்வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…