உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை (Privacy) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவருடன் உரையாட வேண்டுமென்றால் அவரது மொபைல் எண் கட்டாயம் தேவைப்பட்டது. ஆனால், இனி இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளைப் போலவே, ஒவ்வொரு பயனரும் தமக்கென ஒரு தனித்துவமான ‘யூசர்நேம்’ (Username) உருவாக்கிக் கொள்ளும் வசதி வரவுள்ளது. 2026 ஜூன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வசதி மூலம், அறிமுகமில்லாத நபர்களிடம் உங்கள் தனிப்பட்ட செல்போன் எண்ணைப் பகிராமலேயே சாட் செய்ய முடியும்.
இந்த யூசர்நேம் வசதியுடன் ‘கெஸ்ட் சாட்’ (Guest Chats) என்ற சுவாரஸ்யமான அம்சத்தையும் வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் கணக்கு இல்லாதவர்கள் கூட ஒரு பாதுகாப்பான பிரவுசர் இணைப்பு (Link) வழியாக வாட்ஸ்அப் பயனர்களுடன் உரையாட முடியும். இதிலும் வாட்ஸ்அப்பின் வழக்கமான ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறிப்பாக பிசினஸ் தேவைகளுக்காக வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கும், புதிய நபர்களுடன் தற்காலிகமாக உரையாட விரும்புபவர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயரில் யூசர்நேமைத் தேர்வு செய்து கொள்ளலாம், மேலும் இது ஒரு விருப்பத்தேர்வு (Optional) மட்டுமே. ஏற்கனவே உங்கள் மொபைல் எண்ணை வைத்திருப்பவர்கள் எப்போதும் போல உங்களைத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாகப் பொதுவான குரூப் சாட்களில் உங்கள் எண் மற்றவர்களுக்குத் தெரிவதைத் தவிர்க்க இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ‘நம்பர் இல்லாத வாட்ஸ்அப்’ வசதி, டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றத்தை இன்னும் பாதுகாப்பானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் என்பதில் ஐயமில்லை.
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…