பீகார் மாநிலத்தில் ஒரு உச்சகட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மைதானத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்ற இளம் பெண் ஒருவர் ஓட்ட பந்தயத்தின் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஊழியர்களான டிரைவர் வினய் குமார் மற்றும் உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் ஆம்புலன்சில் இளம் பெண்ணுக்கு இப்படி நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, திமுக தலைமையிலான…
குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…