தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அடுத்தடுத்த ஆதரவு சந்திப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்கனவே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுக்கு தனது ஆதரவை உறுதி செய்திருந்த நிலையில், நேற்று இரவு மருது தேசிய கழகமும் அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மருது பாண்டியன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னின்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சந்திப்பின் போது மருது பாண்டியனுக்கு பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக வரவேற்பு அளித்தார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சிறு மற்றும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வரும் சூழலில், மருது தேசிய கழகத்தின் இந்த வருகை அக்கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…