Categories: சினிமா

பிஸ்னஸ் செய்ய உங்கள் பணம் தேவையில்லை… நான் ஒரு முன்மாதிரி ஆள் இல்ல, முட்டாள்- ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பகிர்ந்த தொழில் நுனுக்கங்கள்!

Spread the love

பலதுறைகளில் முதலீடு செய்து இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவராக இருப்பவர் சிவசங்கரன். இவரின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக ஏர்செல் நிறுவனம் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு நிறுவனத்தோடு இணைக்கப்பட்டது.

ஏர்செல் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் ஆலிவ் ஆயில் தோட்டம் உள்ளிட்ட பல தொழில்களை செய்துவரும் சிவசங்கரன், சென்னையின் வண்ணாரப்பேட்டையில் பிறந்து அங்கேயே பள்ளிக் கல்வி முடித்து பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடிததவர். மெக்கானிக்கல் துறையில் சில தொழில்களை செய்த அவர் அவற்றை வெற்றிகரமாக நடத்திக்கொண்டே தொலைதொடர்பு துறையில் கால்பதித்து வெற்றிகரமான தொழில் முனைவோராக வந்தார்.

இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும்,  இப்போது தன்னுடைய மற்ற தொழில்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு அளித்த நேர்காணலில் தொழிலில் தன்னுடைய வெற்றி தோல்விகளுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “நாம் ஒரு தொழில் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பணமே தேவையில்லை.  உங்கள் தொழில் ஐடியாவைக் கேட்டு மற்றவர்கள் தாங்களாகவே பணத்தைக் கொண்டுவந்து போடவேண்டும். அவர்களுக்கு புரியும் அளவுக்கு நீங்கள் உங்கள் ஐடியாவை விளக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

#image_title

நான் தொழில் என்பதை பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டேன். அதனால்தான் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல முதலீடு செய்தேன்.

நான் ஒரு முன்மாதிரியான ஆள் இல்லை. நான் எதையுமே சரியாக ஃபோகஸ் செய்யவில்லை. ஃபோகஸ் என்றா சாப்பிடும் போது அதை மட்டும் நினைக்கவேண்டும். உறங்கும்போது அதை மட்டும் நினைக்கவேண்டும். சாப்பிடும் போது உறக்கத்தையும், உறங்கும்ப்போது தூக்கத்தையும் பற்றி நினைக்கக் கூடாது. அப்படி செய்தா அது டிஃபோகஸ்.

எல்லோரும் நான் ஏர்செல் நிறுவனத்தை விற்றதைப் பற்றி வருத்தமாக பேசினார்கள். ஆனால் அந்நிறுவனம் என் காலுக்கு பத்தாத செருப்பு போல கஷ்டமாக இருந்தது. அதைக் கழட்டிவைத்த பின்னர்தான் இன்னும் இன்பமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

1 மணத்தியாலம் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

2 மணத்தியாலங்கள் ago