#image_title
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.
அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின. அதன் பின்னர் தன்னோடு நடித்த ராகினி மற்றும் அவர் தங்கை ஆகிய இருவரையுமே அவர் திருமணம் செய்துகொண்டார்.
கார்த்திக்கின் திறமைக்கு அவர் இப்போதும் முன்னணி நடிகராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் சில பழக்க வழக்கங்கள்தான் அவரை சினிமாவில் இருந்து வெளியேற்றின.கார்த்திக்குக்கு இடையில் போதை பழக்கம் அதிகமானதால் அவரால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவருக்குப் பல பட வாய்ப்புகள் நழுவிச் சென்றன.
இந்நிலையில் கார்த்திக்கை வைத்து ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என்ற படத்தை இயக்கிய விக்ரமன் தானும் கார்த்திக்கால் சில பிரச்சனைகளை சந்தித்ததாகக் கூறியுள்ளார். ஆனால் கார்த்திக்கின் நடிப்புத் திறமை பற்றி பேசியுள்ள அவர் “கார்த்திக் ஷூட்டிங்குக்கு சீக்கிரமாக வரமாட்டார். ஆனால் வந்துவிட்டால் எவ்வளவு நேரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துக்கொடுத்து விடுவார்.
தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்குப் பிறகு சிறந்த நடிகர் என்றால் அது கார்த்திக்தான். அவர் மட்டும் சில பழக்கங்கள் இலலாமல் இருந்திருந்தால் இப்போதும் ஆக்டிவ்வான நடிகராக இருந்திருப்பார். இப்போது கூட அவருக்கு வாய்ப்புகள் வராமலில்லை. வரும் வாய்ப்புகளை அவர்தான் வேண்டாம் என்கிறார்.” எனக் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…