#image_title
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.
அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின. அதன் பின்னர் தன்னோடு நடித்த ராகினி மற்றும் அவர் தங்கை ஆகிய இருவரையுமே அவர் திருமணம் செய்துகொண்டார்.
கார்த்திக்கின் திறமைக்கு அவர் இப்போதும் முன்னணி நடிகராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் சில பழக்க வழக்கங்கள்தான் அவரை சினிமாவில் இருந்து வெளியேற்றின.கார்த்திக்குக்கு இடையில் போதை பழக்கம் அதிகமானதால் அவரால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவருக்குப் பல பட வாய்ப்புகள் நழுவிச் சென்றன.
இந்நிலையில் கார்த்திக்கை வைத்து ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என்ற படத்தை இயக்கிய விக்ரமன் தானும் கார்த்திக்கால் சில பிரச்சனைகளை சந்தித்ததாகக் கூறியுள்ளார். ஆனால் கார்த்திக்கின் நடிப்புத் திறமை பற்றி பேசியுள்ள அவர் “கார்த்திக் ஷூட்டிங்குக்கு சீக்கிரமாக வரமாட்டார். ஆனால் வந்துவிட்டால் எவ்வளவு நேரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துக்கொடுத்து விடுவார்.
தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்குப் பிறகு சிறந்த நடிகர் என்றால் அது கார்த்திக்தான். அவர் மட்டும் சில பழக்கங்கள் இலலாமல் இருந்திருந்தால் இப்போதும் ஆக்டிவ்வான நடிகராக இருந்திருப்பார். இப்போது கூட அவருக்கு வாய்ப்புகள் வராமலில்லை. வரும் வாய்ப்புகளை அவர்தான் வேண்டாம் என்கிறார்.” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…
உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…
தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…
சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…