“அம்மா நீ செத்துடு, உன்னால தான் என் பொண்டாட்டிக்கு இந்த நிலைமை”… பெற்ற தாயையே அடித்துக் கொன்ற மகன்…. அதிர்ச்சி தரும் காரணம்..!

Spread the love

ஒடிசா மாநிலத்தில் மனைவி மீது கொண்ட அதீத பாசத்தால், பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயூர்பாஞ்ச் மாவட்டம் கோலராபூலியா கிராமத்தைச் சேர்ந்த தபன் சிங் (35) என்பவரது மனைவிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மனைவி மீது தீராத அன்பு கொண்ட தபன் சிங் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியின் நோய்க்குத் தனது தாய் ராய்மணி சிங் (55) செய்த மாந்திரீகமே காரணம் என்று தபன் சிங் தவறாக எண்ணியுள்ளார். தனது தாய் மாந்திரீகம் செய்ததால் தான் மனைவியின் உடல்நிலை சரியாகவில்லை என்ற குருட்டு நம்பிக்கையில், ஆத்திரமடைந்த தபன் சிங் தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெட்நோட்டி காவல்துறையினர், ராய்மணி சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தாயைக் கொலை செய்த தபன் சிங்கை உடனடியாகக் கைது செய்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடநம்பிக்கையாலும், அதீத சந்தேகத்தாலும் பெற்ற தாயையே ஒருவன் கொன்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

5 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago