வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இத்தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்களின் மற்றும் குடும்பத்தினரின் முழுமையான சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் என்றும், ஆனால் ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டே உண்மைகளை மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், விதிமீறல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…