“அடுத்த டார்கெட் ரெடி”…. வேலு, செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து இந்த திமுக அமைச்சருக்குக் குறி?… தவெக அரசின் அடுத்த அதிரடி…. அதிரும் தமிழக அரசியல் களம்….!

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியின் பல்வேறு துறைகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புதிய அமைச்சர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில் ரூ.3.23 கோடி வரை மோசடி நடந்ததாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. இந்த நடவடிக்கை பழிவாங்கும் அரசியல் என திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் சலசலப்பைச் சந்தித்த வண்ணம் உள்ளது.

இந்த ரெய்டு பரபரப்புகள் அடங்குவதற்குள், அதே நாளில் மின்சாரத்துறை சார்பில் புதிய அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் அதிரடியாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ.58,000 கோடி அளவுக்குப் பிரம்மாண்ட முறைகேடு நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் விரைவில் அடுத்த ரெய்டு நடத்தப்படலாம் என்பதை அமைச்சர் சூசகமாகக் உணர்த்தியுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் மின்சாரத்துறையைத் தொடர்ந்து, தற்போது பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்திரப்பதிவு துறையில் தேவைப்பட்டால் நிச்சயம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்; இந்தத் துறை முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முகூர்த்த நாட்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பத்திரப்பதிவுத்துறை சர்வர்கள் தடையின்றிச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சொத்துகளின் சந்தை மதிப்புக்கும் வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள், கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வருவதற்கான முதற்படியா என்றும், தவெக அரசின் அடுத்த ‘டார்கெட்’ இந்தத் துறைதானா என்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

12 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

17 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

19 minutes ago

செல்வப்பெருந்தகையின் பதவி பறிப்பு…. தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…

22 minutes ago

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறியடித்து ஓடிய பெண்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றிய 10 குரங்குகள்… அடுத்த நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…

32 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வெடி! “த்ரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி…?” வாய்விட்டு மாட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

37 minutes ago