தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கக்கூடியவர்தான் வெண்ணிற ஆடை நிர்மலா. புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தின் கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெண்ணிற ஆடை. ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஜெயலலிதா, நிர்மலா மற்றும் மூர்த்தி உள்ளிட்ட அறிமுகமானார்கள். இந்த படம் நடித்த பிறகு நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்றும், மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தி என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவின் பழம்பெரும் கலைஞர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த படம் மூலமாக தனக்கென ஒரு பெயரை பெற்ற நிர்மலா எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர் மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள வெண்ணிற ஆடை நிர்மலா தன்னுடைய அண்ணன் விபத்தில் மரணம் அடைந்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் மற்றும் மனோரமா ஆகியோர் அவரை மீண்டும் நடிக்க தூண்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை மீண்டும் தொடங்கிய நிர்மலா பல வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்தார். தற்போது 77 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இவர் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில், என்னுடைய அப்பா எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்று சொல்கிறேனோ அதே அளவுக்கு சந்தேக புத்தியும் கொண்டவர்.
என்னுடைய அம்மா வாழ்நாளில் கடைசி வரை என்னுடைய அப்பாவின் சந்தேகத்தால் கடுமையான தொல்லைகளை அனுபவித்து வந்தார். நானும் சினிமாவில் நடித்துக் கொண்டு நடனம் ஆடுகின்றேன். ஒருவேளை என்னுடைய வாழ்க்கையிலும் இப்படி சந்தேக புத்தி கொண்ட யாராவது வந்து விட்டால் என்ன செய்வது என்று நான் யோசித்தேன். பல நடிகர்கள் நான் இப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளட்டுமா என்று என்னிடம் கேட்டனர். ஆனால் நான் அதையெல்லாம் மறுத்து விட்டேன். இந்த ஒரு காரணத்தினால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நிர்மலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…
2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அரசியல் நகர்வுகள், இந்திய அரசியலில்…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு விமலா என்ற மனைவியுள்ளார். இந்நிலையில், கடந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…