#image_title
பிரபல நடிகையான சுலக்ஷனா தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலில் பாக்கியராஜ் இயக்கி நடித்த தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்களிலும் சுலக்ஷனா நடித்துள்ளார்.
சமீபத்தில் சுலக்ஷனா அளித்த பேட்டியில் கூறியதாவது, சின்ன வயசுலயே ஹீரோயின் ஆகணும்னு என் வீட்டுல கண்டிப்பா சொல்லிட்டாங்க.நெறைய ஆடிஷன் போயிருக்கேன். நீ சின்ன பொண்ணா இருக்க, ஒல்லியா இருக்க, அப்படி இப்படின்னு சொல்லி என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஹீரோயின் ஆனேன். இதனை அடுத்து எந்த நடிகரோட கிசு கிசு வந்திருக்கு என சித்ரா லட்சுமணன் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சுலக்ஷனா கார்த்திக் சாரோட நான் ரொம்ப க்ளோசா இருப்பேன். அவர் எனக்கு பிரதர் மாதிரி. நான் அவர் கூட நிறைய படம் பண்ணி இருக்கேன். ஒரு தடவை ட்ராவல்ல இருந்தோம். அப்போ கார்த்திக் என்கிட்ட இனிமேல் நான் உன் கூட சேர்ந்து படம் பண்ண மாட்டேன்னு சொன்னாரு. நான் ஏன்னு கேட்கும் போது உன் கூட கெமிஸ்ட்ரியே வரமாட்டேங்குது. உன்ன பார்த்தா பாய் ஃப்ரெண்ட் மாதிரிதான் ஒரு பீல் ஆகுது. உன்ன பார்த்தா என்ன பார்த்த மாதிரிதான் இருக்குது. நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் மாதிரி தான் இருக்க.
அடுத்த படத்துல இருந்து உனக்கு நான் NO சொல்லிடுவேன்னு சொன்னார். இதே மாதிரி கிழக்கு வாசல் படம் ஷூட்டிங் நடந்த போது கார்த்திக், ரேவதி உட்கார்ந்திருந்தாங்க. நான் என் பையனோட அங்க போய் பேசிட்டு இருந்தேன். அப்போது கார்த்திக் ரேவதியிடம் என்னை அறிமுகப்படுத்தி வச்சு இது யார் தெரியுமா? இது என்னோட பாய் ஃப்ரெண்ட். என்னோட க்ளோஸ் பிரண்ட் அப்படின்னு சொன்னாரு. மத்தபடி எந்த ஹீரோக்களோடும் எனக்கு கிசுகிசு வந்தது கிடையாது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…