#image_title
தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக இப்போது அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. சரோஜா தேவி எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரின் மழலை தமிழ் மாறவே இல்லை. ஆதவன் படத்தில் கூட அவரின் மொழி மாறாமல் அப்படியே இருந்தது.
சரோஜா தேவியின் தனித்தன்மையே அவருடைய ஆடை அலங்காரமும் மேக்கப்பும்தான். அவருக்கான ஆடைகளை எல்லா படத்திலும் அவரேதான் தேர்ந்தெடுப்பாராம். அதுபோல மேக்கப் கூட தானே போட்டுக்கொள்வாராம். இதுதான் அவரின் திரைக்கவர்ச்சியின் ரகசியம் எனக் கூறியுள்ளார்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருந்தாலும் சரோஜா தேவி மலையாளப் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. அது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமனன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரோஜா தேவி “அப்போது அவர்கள் படங்களில் மாராப்பு அணியும் வழக்கம் இல்லை. வேட்டி மற்றும் ஜாக்கெட் அணிந்து முண்டு மட்டும் போட்டுக் கொள்வார்கள். எனக்கு அந்த உடையில் நடிக்க விருப்பம் இல்லை. அதனால்தான் நான் மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது அந்த உடைக் கலாச்சாரம் மாறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து,…
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…