Categories: சினிமா

தனுஷ் கூட நடிக்கும் போது சாய் பல்லவியை அழ வைத்த பிரபுதேவா.. அவரே பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாளத்து பைகிளியாக தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சாய்பல்லவி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். நடிகர் தனுஷின் மாரி 2 திரைப்பட பாடலான ரவுடி பேபி பாடல் இன்றும் தனி இடத்தை பிடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் – தீ பாடிய இந்தப் பாடல் கடந்த 2019 ஆம் ஆண்டு youtubeல் பல சாதனைகளை முறியடித்து இருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட மாரி படத்தின் இரண்டாம் பாகமாக பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு மாரி 2 திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தின் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திலும் தனுசுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யுவன் சங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

படத்தின் முதல் சிங்கிளாக 2018 அக்டோபர் 25ஆம் தேதி ரவுடி பேபி பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 2019 ஜனவரியில் யூட்யூபில் வெளியான இந்த பாடல் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பல சாதனைகளைப் படைத்தது. தென்னிந்திய அளவில் முதல் முறையாக யூடியூபில் 150 கோடி பார்வையாளர்களைக் கடந்த முதல் பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் படைத்தது. பாடலின் ஒளிப்பதிவும் அதில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடனமும் வெகுவாக பாராட்டப்பட்டது. ரவுடி பேபி பாடல் ஷூட்டிங் நடைபெறுவதற்கு முன்னதாக பிரபுதேவா கொடுத்த நடன அசைவுகளை நான்கு நாட்களாக சாய் பல்லவி பயிற்சி செய்துள்ளார்.

பிறகு சூட்டிங் நடைபெற்ற நாளில் நடன அசைவுகளை முழுமையாக பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு வந்த நிலையில் அங்கு சில நடன அசைவுகளை பிரபுதேவா மாற்றி உள்ளார். ஏ காமாட்சி மீனாட்சி என்ற வரிகளின் போது தான் ஸ்டெப்பை பிரபுதேவா மாற்றி உள்ளார்.  அதில் சாய்பல்லவி இரண்டு மூன்று டேக்குகள் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையே இழந்த சாய் பல்லவி தன்னால் முடியுமா என்று நினைத்து அழுதுவிட்டார். பிறகு பிரபு தேவா அவரை சமாதானப்படுத்தி ஆடவைத்த நிலையில் இன்றளவும் சாய் பல்லவியின் சிறப்பான நடனம் இடம்பெற்ற பாடல்களில் ரவுடி பேபி பாடல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

2 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago