#image_title
இந்திய திரை உலகின் நேஷனல் கிரஷ் என்ற பட்டத்தோடு வளம் வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. தனது இளம் வயதில் வாடகை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவரின் தந்தை மிகப்பெரிய தேயிலைத் தோட்ட முதலாளியாக மாறினார். பெங்களூரில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையில் களமிறங்கினார்.அதன் பின்னர் தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயணித்து வரும் ராஷ்மிகா கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.
#image_title
தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராஸ்மிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கு வயது 28.தற்போது தமிழில் முன்னணி நடிகையாகவும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் நடித்து வருகிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான புஷ்பா 2 வில் ரஷ்மிகா நடித்தவர்.
#image_title
இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நேற்று படத்தில் ஆடியோ லாஞ்சு நடைபெற்றது.
#image_title
அப்போது மேடையில் பேசிய ரஷ்மிகாவிடம் உங்களுக்கு கணவராக வர போகிறவர் சினிமா துறையை சேர்ந்தவரா? அல்லது வேறு துறையை சேர்ந்தவரா ? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், அது உங்க எல்லோருக்கும் தெரிந்தது தான் என்று கூறியுள்ளார். இதிலிருந்து அவர் விஜய் தேவர கொண்டாவை தான் சொல்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…