Categories: சினிமா

ரொம்ப மோசமா பேசிட்டாங்க.. இதுபோல எனக்கு எங்கயும் நடக்கல.. பரபரப்பை கிளப்பிய நடிகை நமீதா..!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் ஒட்டுமொத்த இளசுகளையும் கட்டிப் போட்டவர் தான் நடிகை நமீதா. எங்கள் அண்ணா என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஐட்டம் பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். அனைவரையும் மச்சான் என்று சொல்வதில் இருந்து இவர் மேலும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். சினிமாவின் உச்சத்திற்கு சென்ற இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போக ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு கொண்டு அதன் மூலமும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.

பிறகு இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். மறுபக்கம் அரசியலிலும் நமீதா கவனம் செலுத்தி வருகின்றார். தனக்கு ஏற்றது போல முக்கியமான கதாபாத்திரம் வந்தால் நடிப்பேன் என்று சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நமீதா தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அங்கு பெண் காவல் அதிகாரி ஒருவர் நமீதாவிடம் நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேள்விகளை கேட்டதாக அவர் மீது நமீதா புகார் அளித்துள்ளார். நான் இந்து மதத்தை சேர்ந்தவள், என்னுடைய திருமணம் திருப்பதியில் தான் நடந்தது. என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். இருந்தாலும் கோவில் நிர்வாகம் என்னிடம் வந்து இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்கின்றனர்.

கோவில்களில் இது போன்ற நடவடிக்கைகள் நடப்பது தனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்று நமீதா அந்த வீடியோவில் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று இருப்பதாகவும் இந்த மாதிரி ஒரு கேள்வியை கூட எந்த கோவிலிலும் தன்னிடம் இதுவரை யாரும் கேட்டதில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நமீதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோவில் நிர்வாகம், மேல் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு கோவிலுக்குள் அனுமதிக்கிறோம் சிறிது நேரம் காத்திருக்குமாறு நமிதாவிடம் கூறியதாகவும் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்துக்களை மட்டும் அனுமதித்து வருகிறோம். நமீதாவிடம் காட்டமாக நடந்து கொள்ளவில்லை. கோவில் விதிகளின்படி தான் பேசினோம். கோவில் இணை ஆணையர் கிருஷ்ணனிடம் கேட்டு பிறகு நமீதாவை அனுமதித்தோம் என கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Nanthini

Recent Posts

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

18 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

20 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

29 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

30 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

36 minutes ago