Connect with us

CINEMA

விவாகரத்து பெற்ற நடிகை நளினியின் மகன் மற்றும் மகளை பாத்துருக்கீங்களா?… இதோ அழகிய குடும்ப புகைப்படம் …

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. அதிலும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ என பல திரைப்படங்களை இவருடைய வெற்றி படங்களாக கூறிக்கொண்டே போகலாம்.

   

கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளிவந்த மேதை எனும் படத்தில் நடித்திருந்த ராமராஜன், அதன்பின் மீண்டும் தற்போது தான் ஹீரோவாக சாமானியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

நடிகர் ராமராஜன் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.

ராமராஜன் – நளினி தம்பதிக்கு அருணா சுப்பிரமணியம் மற்றும் அருண் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகை நளினி தனது பேரக் குழந்தைகள், மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமாக இருக்கும் அழகிய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top