Categories: CINEMA

அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வாங்கி கெத்து காட்டிய நடிகை.. அம்மனுக்கே அடையாளம் கொடுத்த புன்னகை அரசி

இன்று தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி ஆடம்பர பங்களா, ஹோட்டல், ரியல் எஸ்டேட் என தலைமுறை தலைமுறைக்குமாக சொத்து சேர்த்து வைத்திருக்கு நடிகர்களுக்கு மத்தியில் 1960-70 களிலேயே புகழின் உச்சியில் இருந்து சொந்தமாக ஹெலிகாப்டரையே வாங்கி கெத்து காட்டிய நடிகை தான் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களிலும் தனி முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். அம்மன் வேடம் என்றாலே கூப்பிடுங்க கே.ஆர்.விஜயா என்று சொல்லும் அளவிற்கு பெண் கடவுள்களுக்கு அடையாளம் கொடுத்தவர். இவர் நடித்த பக்திப் படங்களில் தியேட்டர்களில் பெண்களை சாமியாட வைத்து அந்த கேரக்டர்களுக்கே வடிவம் கொடுத்தவர்.

#image_title

வறுமையான குடும்பத்தில் பிறந்து, பிழைப்புக்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, பின் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.விஜயா செய்துள்ள சாதனைகளை, இதர தமிழ்நடிகைகளால் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை.

தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமை இவரையே சேரும்.  மேலும் இன்று லேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாரா சொந்தமாக பிளைட் வைத்திருப்பது போன்று, அந்தக் காலத்திலேயே கே.ஆர்.விஜயா சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்தார் என்றால் அவரின் புகழை பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், குதிரை வளர்ப்பு என ஆடம்பரத்தில் ஜொலித்த நடிகையும் இவரே.

பட டைட்டிலால் அர்ஜுனுக்கு அதுக்கு நோ சொன்ன தமிழக அரசு.. தேச பக்தி நாயகனுக்கு ஏற்பட்ட இழப்பு

தனது சொந்த செலவில் முதன் முறையாக தான் நடித்த “நத்தையில் முத்து” என்ற படத்தின் வெற்றி விழாவினைக் கொண்டாடிய முதல் தமிழ் நடிகை இவரே.. என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது இப்போதிருக்கும் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக தனியாக கதையின் நாயகியாக சபதம், வாயாடி, திருடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, அன்னை அபிராமி போன்ற படங்களில் நடித்து அந்தக் கால கட்டத்திலேயே புகழ் பெற்றார்.

#image_title

முதல்நிலை நாயகியாக பிரபலமாக பல படங்களில் நடித்த காலகட்டத்திலேயே, இரண்டாம்நிலை நாயகியாகவும், நடித்தவர். தன் கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும் படத்தில் நடித்துவிடுவார். இப்படி நடித்தால் தன்இமேஜ் பாதிக்குமே என்றெல்லாம் ஒருபோதும் கவலைப்படாதவர்.

பின்னாளில் தனது கணவருக்கு மூன்றாம் தாரமாக மணமுடித்தாலும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தியவர்.  திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு வந்தும், மறுத்து, படங்களில் தொடர்ந்து நடிக்க கணவருடைய முழு ஆதரவும், ஊக்கமும் கிடைத்த பின்னரே நடிக்க வந்தவர்.

John

Recent Posts

வெள்ளி விழா படங்களை கொடுத்தும்.. நடிகர் சிவகுமார் கடைசிவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

13 நிமிடங்கள் ago

என்னது இது ஆதி காலத்து பேரா இருக்கு.. இதெல்லாம் செட் ஆகாது.. பிரபல நடிகையின் பெயரை மாற்றிய எம்.ஆர்.ராதா..!!

நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி…

13 நிமிடங்கள் ago

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்.. அங்கு நடந்த சம்பவத்தை மெய்மறந்து பார்க்க நடிகை பிரியா ஆனந்த்.. வைரல் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை…

48 நிமிடங்கள் ago

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…

1 மணி நேரம் ago

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…

2 மணி நேரங்கள் ago

மாணவர்களுக்கு தடபுடலாக நடிகர் விஜய் வைத்து விருந்து.. ஒரு வேலைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..?

விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட உணவுகளுக்காக மட்டும் 72 லட்சம் ரூபாய்…

3 மணி நேரங்கள் ago