#image_title
நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து அது ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்து விட்டாலே போதும் அடுத்தடுத்த திரைப்படத்திற்கு லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள். நடிகர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவருமே இப்படித்தான் இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன் நடிகர் சிவகுமாரின் மகன்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் கோடிகளில் தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் நடிகர் சிவகுமார் அப்படி கிடையாது. பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார்.
நல்ல நடிகராக மட்டுமல்லாமல் நல்ல பேச்சாளராகவும் இருந்து வரும் இவர் மகாபாரத ராமாயண கதைகளை பல மணி நேரம் மனப்பாடமாக கூறக்கூடிய ஒரு நபர். சிவகுமார் நடிப்பில் வெளிவந்த அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு, பத்ரகாளி போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் சம்பளத்தை உயர்த்தி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் வெறும் 25 ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெற்று இருக்கின்றார்.
இது குறித்து ஒரு முறை சாந்தோ சின்னப்ப தேவர் சிவகுமாரை சந்தித்து ஒரு படத்தை ஒப்பந்தம் செய்ய வந்திருக்கின்றார். அப்போது சம்பளமாக சிவகுமார் 25 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கின்றார். இதை பார்த்த சின்னப்ப தேவர் மூன்று வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்தும் அதே 25 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறாய் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சிவகுமார் அன்னக்கிளி திரைப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் அந்த படத்தின் அன்னத்துக்காக, பத்ரகாளி வெற்றி பெற்றதற்கு காரணம் திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ராணிசந்த்ராவுக்காக. ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் அப்படத்தில் நடித்த ஆடுக்காக, இதில் நான் என்ன செய்தேன் நான் எப்படி சம்பளத்தை உயர்த்த முடியும் என்று கூறினாராம். இப்படி பல திரைப்படங்கள் 25 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி வந்த இவர் தன்னுடைய 125 வது திரைப்படத்தில் தான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாராம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…