CINEMA
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் இந்த நடிகை யாருன்னு தெரியுதா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?
80ஸ் காலகட்டத்தில் தமிழின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜெயபிரதா. இவர் தமிழில் மன்மத லீலை ,நினைத்தாலே இனிக்கும் ,சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்.
#image_title#image_title
இவர் தனது 30 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நடிகை ஜெயபிரதா 2004 ஆம் ஆண்டு முதல் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கினார். அவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரிய ஈடுபாடு கொண்டவர் நடிகை ஜெயப்பிரதா.
சென்னையில் அவரது பெயரின் ஒரு திரையரங்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ஜெயப்பிரதாவின் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் 1986-ல் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சந்திரா என்பவரை திருமணம் செய்த இவருக்கு மூன்று குழந்தைகளை உள்ளனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இவர் நடிகை ஜெயப்பிரதாவை திருமணம் செய்து கொண்டார் . நடிகை ஜெயபிரதாவிற்கு ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது நடிகை ஜெயப்பிரதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.