தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருக்கின்றனர். புதிதாக பல நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான நாயகிகள், படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக ஆடி, பாடி கல்லா கட்டுகின்றனர். சிலர், சில காட்சிகளில் நடித்தாலும் கைநிறைய சம்பளம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், கவர்ச்சி ஆபாசம் என எப்படி வேண்டுமானாலும் கேமரா முன் நிற்கின்றனர். இதில் பிரபலமான, பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளும்தான். இதற்கு உதாரணமாக, லியோ படத்தில் தேவையே இல்லாமல் லிப் லாக் காட்சியில் நடித்த திரிஷாவை சொல்லலாம்.
அந்த வகையில், நடிப்பை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் முக்கியமானவர் ஷீலா ராஜ்குமார். சினம், அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை, மண்டேலா, திரவுபதி, டூலெட், திரவுபதி உள்ளிட்ட படங்களில் நல்ல நடிகையாக தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தவர். அழகிய தமிழ் மகள் சீரியலிலும் நடித்து, சின்னத்திரை பார்வையாளர்களிடம் நல்ல அபிமானத்தை பெற்றவர். படங்கள், சீரியல்கள் மட்டுமின்றி, குறும்படங்களிலும் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், உதவி இயக்குநர் சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், தன் கணவரை விட்டு பிரிந்தததாக நேற்று அவர், தெரிவித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், எந்த ஒரு கிசுகிசுவுக்கும் ஆளாகாத சிறந்த நடிகையான இவர், தொடர்ந்து தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் உதவி இயக்குநரான சோழனுக்கு பட வாய்ப்புகள் இல்லை. வீட்டில் வேலையில்லாமல் இருந்திருக்கிறார். எத்தனை நாட்களுக்கு ஷீலா ராஜ்குமார் வருமானத்தில், உழைப்பில் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை நீடித்திருக்கிறது. அவர் கணவர் சோழனுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, ஈகோ, விரக்தி கடைசியில் சந்தேகமாக வெடித்திருக்கிறது. இதையடுத்து, ஷீலா ராஜ்குமார், தன் கணவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார். அவரை பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…