Categories: சினிமா

சூர்யா கூட அந்தப் படத்துல நான் தான் நடிச்சிருக்கணும்.. ஆனா,.. பல வருடம் கழித்து புலம்பும் காயத்ரி ரகுராம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரைட் நடிகையாக இருந்தவர்தான் காயத்ரி ரகுராம். தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குனராகவும் நடிகையாகவும் திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் ஆளை அடையாளம் தெரியாமல் இருந்த காயத்ரி வாய்ப்பு இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் அப்படியே சினிமா பக்கம் திரும்பினார். தமிழக பாஜகவின் முகமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்ற பிறகு அவர் கட்சி ரீதியாக ஓரம் கட்டப்பட்டார்.

 

அதனை பலமுறை காயத்ரியே பகிரங்கமாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாஜகவை விட்டு வெளியேறிய காயத்ரி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை செய்யும் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தி வந்தார். சிறிது காலம் அரசியல் பாதையை விட்டு அமைதியாக இருந்து வந்த காயத்ரி பிறகு திமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதிரடியாக அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சூர்யாவின் நந்தா படத்தில் நடிக்க முதலில் என்னதான் கூப்பிட்டாங்க. ஆனா அப்போ என்னால அந்த படம் பண்ண முடியல. காரணம் நான் அப்போது பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.

பிறகு 12ஆம் வகுப்பு படிக்கும் போது கூட தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரி நடித்துப் பார்க்கலாம் என்று சென்றேன். எனக்கு அப்போ முடி கம்மியாக இருந்ததால் விக் வச்சிட்டாங்க. அது ஒரு கிராமத்து கதை என்பதால் முடி நீளமாக இருக்க வேண்டும்.. விக் வைத்தது சுத்தமா எனக்கு பிடிக்கல. அதனால இனிமே நம்மளோட ஒரிஜினல் முடிய வச்சு தான் நடிக்கணும்னு முடிவு செய்து பிறகு முடி வளர்க்க ஆரம்பித்தேன் இன்று காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago