#image_title
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரைட் நடிகையாக இருந்தவர்தான் காயத்ரி ரகுராம். தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குனராகவும் நடிகையாகவும் திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் ஆளை அடையாளம் தெரியாமல் இருந்த காயத்ரி வாய்ப்பு இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காததால் அப்படியே சினிமா பக்கம் திரும்பினார். தமிழக பாஜகவின் முகமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்ற பிறகு அவர் கட்சி ரீதியாக ஓரம் கட்டப்பட்டார்.
அதனை பலமுறை காயத்ரியே பகிரங்கமாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாஜகவை விட்டு வெளியேறிய காயத்ரி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை செய்யும் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தி வந்தார். சிறிது காலம் அரசியல் பாதையை விட்டு அமைதியாக இருந்து வந்த காயத்ரி பிறகு திமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதிரடியாக அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சூர்யாவின் நந்தா படத்தில் நடிக்க முதலில் என்னதான் கூப்பிட்டாங்க. ஆனா அப்போ என்னால அந்த படம் பண்ண முடியல. காரணம் நான் அப்போது பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.
பிறகு 12ஆம் வகுப்பு படிக்கும் போது கூட தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரி நடித்துப் பார்க்கலாம் என்று சென்றேன். எனக்கு அப்போ முடி கம்மியாக இருந்ததால் விக் வச்சிட்டாங்க. அது ஒரு கிராமத்து கதை என்பதால் முடி நீளமாக இருக்க வேண்டும்.. விக் வைத்தது சுத்தமா எனக்கு பிடிக்கல. அதனால இனிமே நம்மளோட ஒரிஜினல் முடிய வச்சு தான் நடிக்கணும்னு முடிவு செய்து பிறகு முடி வளர்க்க ஆரம்பித்தேன் இன்று காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…