Categories: சினிமா

இனிமே நடிக்க மாட்டேன்.. சிவாஜி படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பானுமதி.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குனர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 மற்றும் 60 காலகட்டங்களில் மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் பானுமதி. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என அப்போதே பன்முக திறமைகளை கொண்டு கலக்கினார். இவரைப் பார்த்து சிவாஜி மற்றும் எம் ஜி ஆர் போன்ற நடிகர்களும் மிரல்வார்களாம். இவரிடம் எப்போதுமே அனைவரும் மிகுந்த மரியாதையுடன் தான் பேசுவார்களாம். நடிகர் திலகம் சிவாஜியே பானுமதி அம்மாவுக்கு முன் நான் ஒரு சின்ன பையன் என்று ஒருமுறை சொன்னார் என்றால் பானுமதி எவ்வளவு ஆளுமையுடன் இருந்திருப்பார் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். பானுமதி மிகுந்த சுயமரியாதை கொண்டவர். ஒரு படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு சரியான மற்றும் பொருத்தமான வசனங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அவருக்கு நல்ல காட்சிகள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அப்படத்தில் இருந்து விலகி விடுவார். அதனைப் போல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலருடன் சண்டை போட்டுக் கொண்டு பல படங்களிலிருந்தும் பானுமதி வெளியேறி இருக்கிறார். எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படத்திலிருந்தும் அப்படிதான் வெளியேறினார். பானுமதி அப்படி இருந்தும் படத்தின் வெற்றிக்கு பானுமதி தேவைப்பட்டதால் அவருக்கு பலரும் பணிந்து போனார்கள். இதற்கு ஏவியம் மெய்யப்ப செட்டியாரும் விதிவிலக்கு கிடையாது. ஏவிஎம் நிறுவனத்தில் பானுமதி நடித்த திரைப்படம் தான் அன்னை.

இந்த திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சில முடிவடைந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் இனிமேல் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று செட்டியாரிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு பானுமதி அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இயக்குனர் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு அதிர்ச்சி அடைந்து இதனை செட்டியாரிடம் சொல்ல அவரோ அவரின் வீட்டுக்கு போய் அவருக்கு என்ன பிரச்சனை எனக் கேளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டார். அவர் சொல்லியபடியே இயக்குனர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோர் படத்தின் கதை ஆசிரியரை அழைத்துக் கொண்டு பானுமதியின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது பானுமதி ஒரு காட்சியில் அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல வசனம் வருகிறது. சௌகார் ஜானகி கருத்து அந்த இடத்தில் ஓங்கி நிற்கிறது. ஆனால் நான் சும்மா நின்று கொண்டிருக்கின்றேன். எனக்கு நல்ல வசனத்தை எழுதிக் கொடுங்கள், சௌகார் ஜானகியின் கருத்துக்கு மேலாக என்னுடைய கருத்து அந்த படத்தில் நிற்க வேண்டும். அப்போதுதான் நான் படத்தில் நடிப்பேன் என பானுமதி கண்டிஷன் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குழம்பிப்போன இயக்குனர்கள் மற்றும் வசனகர்த்தா ஆகியோர் சிறிது நேரம் யோசித்து பானுமதி கூறியது போலவே வசனத்தை எழுதிக் கொடுத்தனர். அதைப் பார்த்ததும் சந்தோஷம் அடைந்த பானுமதி மீண்டும் அன்னை படத்தில் நடித்து முடித்தார்

Nanthini

Recent Posts

ராங் ரூட்டில் வந்த பெண்…! “ஒரே நொடியில் பேருந்தில் சிக்கி…”காப்பாற்றிய டிரைவருக்கே திட்டு விழுந்த அவலம்… திக் திக் வீடியோ….!!

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தவறான பாதையில் (Wrong Side) வந்த பெண் ஒருவர், எதிரே பேருந்து வருவதைக் கண்டும்…

57 seconds ago

“அதிமுக கூட்டணியில் பாமக கெத்து.. பாஜக, அமமுக பரிதாபம்?… 2026 தேர்தல் முடிவுகளில் வெளியாகும் அதிரடித் திருப்பம்”…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே கலவையான முடிவுகள் கிடைத்து வருகின்றன. அதிமுக…

2 minutes ago

“கரூர் கேஸ்.. பெரிய பிரச்சாரம் இல்லை.. ஏகப்பட்ட குற்றவழக்கு”… கடைசில மொத்தமா தட்டி தூக்கிய தவெக… சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருந்தாலும், தமிழக…

2 minutes ago

BREAKING: தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி… கிருஷ்ணகிரியில் நடந்த அந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி…!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர், அக்கட்சியின் தலைவர் விஜய் தோல்வியடைவார் என்ற வதந்திகளைத் தாங்கிக்…

8 minutes ago

“தண்ணீர் பிடிக்கச் சென்ற தாய்.. வீட்டின் உள்ளே புகுந்த காம மிருகம்… 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக்கில் கொடூர சம்பவம்”…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில், மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

12 minutes ago

ஏன் இந்த மோதல்…? ரயில்வே நடைமேடையில் மல்லுக்கட்டிய இருவர்…. தெறித்து ஓடிய பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ரயில் நிலையத்தின் நடைமேடையில் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது, இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் பரபரப்பை…

13 minutes ago