தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா விஷால் காமினேஷனை சிறப்பாக படமாக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். டைம் ட்ராவல் மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி கூட்டணியில் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வருகிற 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி இணையும் மூன்றாவது திரைப்படம்.
இது இதற்கு முன்னதாக தாமிரபரணி, பூஜை உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், இயக்குனர் ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்கள்.
அப்போது பயில்வான் ரங்கநாதனும் அங்கு வந்திருந்தார். அவர் விஷாலிடம் ஒரு கேள்வி கேட்டார். அவரைப் பார்த்தவுடன் அவரின் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசிவிட்டார் விஷால். மேலும் அது “அவருக்கே தெரியும், நான் ஏன் பதில் சொல்ல மாட்டேன் என்று.. அவருடைய கேள்விக்கு நான் கட்டாயம் பதில் கூறவே மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் நடிகர் விஷால். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.