#image_title
தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவராக இருந்த விஜயகாந்தை தொடர்ந்து, சரத்குமார் பல ஆண்டுகளாக தலைவராக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நடிகர் சங்கத்திற்கான இடத்தில் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கிய நாசர் தலைமையிலான விஷால் அணி வெற்றி பெற்றது.
#image_title#image_title
அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல் செங்கல் எடுத்து கொடுக்க கோலகலமாக நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆண்டுகள் ஆனதே தவிர இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இதற்கு காரணம் நிதி பற்றாக்குறை தான். இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நடிகர் சங்க தலைவராக நாசர் செயல்பட்டு வருகிறார். பொருளாளராக கார்த்தியும், பொதுச்செயலாளராக விஷாலும் பதவி வகித்து வருகின்றனர். நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற முடிவோடு இருக்கிறார் விஷால்.
தற்போது கட்டிட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அதை முடிக்க தேவையான 40 கோடியை வங்கியில் கடனாக வாங்க உள்ளதாக ஏற்கனவே நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டிடத்துக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறார். இதனை நடிகர் விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்து அவருக்கு நன்றியை கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…