தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவராக இருந்த விஜயகாந்தை தொடர்ந்து, சரத்குமார் பல ஆண்டுகளாக தலைவராக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நடிகர் சங்கத்திற்கான இடத்தில் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கிய நாசர் தலைமையிலான விஷால் அணி வெற்றி பெற்றது.
#image_title#image_title
அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல் செங்கல் எடுத்து கொடுக்க கோலகலமாக நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆண்டுகள் ஆனதே தவிர இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இதற்கு காரணம் நிதி பற்றாக்குறை தான். இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நடிகர் சங்க தலைவராக நாசர் செயல்பட்டு வருகிறார். பொருளாளராக கார்த்தியும், பொதுச்செயலாளராக விஷாலும் பதவி வகித்து வருகின்றனர். நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற முடிவோடு இருக்கிறார் விஷால்.
தற்போது கட்டிட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அதை முடிக்க தேவையான 40 கோடியை வங்கியில் கடனாக வாங்க உள்ளதாக ஏற்கனவே நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டிடத்துக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறார். இதனை நடிகர் விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்து அவருக்கு நன்றியை கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…
View this post on Instagram