தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் நடிகர் சூர்யா, ஜோதிகா. இந்த ஜோடி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உண்மையான காதல் மட்டுமே தேவை என்பதை நிரூபித்துள்ளனர். 14 வருட திருமண இன்பத்திற்குப் பிறகும், இந்த ஜோடி இன்னும் தங்கள் தோழமையால் தங்கள் ரசிகர்களை வசீகரிப்பதோடு, முக்கிய ஜோடியாக இருக்கிறது.
1999-ம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் படப்பிடிப்பின் போது மும்பையைச் சேர்ந்த ஜோதிகா சதனாவை சூர்யா சந்தித்தார் . 2001ல் சூர்யாவின் நந்தா படம் வெளியானது. அவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட ஜோதிகா, காக்கா காக்கா படத்திற்காக இயக்குனர் கவுதம் மேனனிடம் நடிகராக நடிக்க சூர்யா பெயரை பரிந்துரை செய்தார். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகே இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.
2006 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் இருகிறார்கள். திருமண வாழ்க்கையை அழகாக எப்படி கொண்டு செல்வது என்று இந்த ஜோடிகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் அந்த அளவிற்கு ரசிகர்கள் கண்ணுபடும்படி மகிழ்ச்சியான காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள்.
தற்போது நடிகர் சூர்யா குழந்தைகளின் படிப்பிற்காக குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடி புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக சிம்லாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்; அங்கு தான் சுற்றிப்பார்த்த இடங்களை எல்லாம் வீடியோ மூலம் இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.
View this post on Instagram