CINEMA
இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?
பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 2009 இல் வெளியான ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானா.ர் இத்திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் கயல் தேவராஜ். இவர் தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்தும் உள்ளார். தற்பொழுது இவர் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது இருவருக்குமிடையில் நிற்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் அந்த பதிவில், ‘சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில், ஒரு புளோரில் விஜய் நடிக்கும் ‘ப்ரியமுடன் ‘ ஷூட்டிங் நடந்தது. அப்போது வேறொரு புளோரில் பிரபு நடித்த ‘மனம் விரும்புதே உன்னை’ ஷூட்டிங் நடந்தது. நான் விஜய்யைப் பார்க்கச் சென்றிருந்தபோது, எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது இந்த புகைப்படமானது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இப்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் கயல் தேவராஜா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.