மும்பையில் குடியேறினாலும் சொந்த மண்ணை மறக்காத சூர்யா… புதுசா இப்படி ஒரு விஷயம் பண்ணி இருக்காரா.. அட இது நல்லாருக்கே..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80 மற்றும் 90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் சிவகுமார். இவரைப் போலவே அவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி என இருவருமே சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவிலயே ஆர்வம் இல்லாமல் இருந்த சூர்யா, வசந்த் கேட்டதால் நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடக்கத்தில் நடிக்க தடுமாறினாலும் அதன் பிறகு கௌதம் மேனன் மற்றும் பாலா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை சூர்யா மெருகேற்றி கொண்டார். குறிப்பாக சிங்கம் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலில் சிவக்குமார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. சில வருடம் காத்திருந்து இருவரும் பெற்றோர் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சென்னை தி நகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த சூர்யா மூன்று அடுக்குக் கொண்ட அந்த வீட்டில் தனது அப்பா அம்மா மற்றும் தனது சகோதரர் கார்த்தி என அனைவரிடமும் இருந்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு மனைவி ஜோதிகாவுக்காக மும்பையில் புது வீடு வாங்கி அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

இதனால் கார்த்தி தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார். சூர்யாவும் ஜோதிகாவும் சென்னை வரும்போது கூட அப்பா அம்மா வீட்டிற்கு வராமல் நட்சத்திர ஹோட்டலில் தங்கி வந்தனர். இப்படியான நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சூர்யா ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார். ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வந்தால் இனிமேல் அவர் அந்த வீட்டில் தான் தங்குவார் என்று கூறப்படுகிறது. சூர்யாவுக்கு கங்குவா படம் தோல்வியடைந்த நிலையில் ரெட்ரோ படம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago