சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பப் ஒன்றில் கடந்த மாதம் நடைபெற்ற சண்டையை அடுத்து அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பிரசாந்த் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறையினர் போதைப்பொருள் வழக்கில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடந்து வந்த நிலையில் பிரசாந்த் தலைமையில் கொக்கைன் போன்ற பொருள்கள் பலரிடம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு பிரசாந்த் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனை அடுத்து இன்று காலை போலீசார் அவருடைய இல்லத்தில் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார்கள். ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கி இருந்தாரா? அல்லது அவர் மற்றவர்களுக்கு வழங்கியதா? என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்ட நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதை மருத்துவ பரிசோதனை மூலம் காவல்துறையினர் உறுதி செய்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் நடந்த தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இப்படியான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட ஸ்ரீகாந்த் 12000 பணம் கொடுத்து ஒரு கிராம் போதை பொருளை தன்னிடம் வாங்கி செல்வார் என அரசியல் கட்சி நிர்வாகி பிரசாந்த் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…
தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித்…
தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர்கள் முடிவடைய உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல அதிரடி…
தமிழகத்தில் ஒப்பந்ததாரர்கள் தங்களது பணி தொகையில் 20% வரை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் கொடுத்து வந்த நிலை இனி…
மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…